புழக்கத்திற்கு அதிகமாக வங்கிகளுக்குள் பணம்: விபரீதமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரம்

THE TIMES TAMIL

மாதவராஜ்

மாதவராஜ் மாதவராஜ்

வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதும், கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதும் உண்மையானால் ருபாய் நோட்டுகளால் மக்களை வதைத்தவன் ருபாய் நோட்டுகளாலேயே தன் முடிவைக் காண்பான் என்பதும் உண்மையாகலாம்.

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி. இந்த ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நவம்பர் 8ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி வங்கிகளுக்குள் இருந்த 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மதிப்பு 4.70 லட்சம் கோடி.

ஆக வெளியே இருந்தது 10.74 லட்சம் கோடி. இதில்தான் பெரும்பகுதி கருப்புப்பணம் இருக்கிறது என்று மோடியும், மோடியின் ஆதரவாளர்களும் சொல்லிக்கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி கருப்புப்பணம் என கணக்கிடப்பட்டது

மோடியின் அறிவிப்புக்குப் பிறகு, இந்த 3 லட்சம் கோடியில் ஒரு லட்சம் கோடி வங்கியின் கணக்குகளுக்குள் வரும். அது குறித்து ஆராய வேண்டும். மீதி இரண்டு லட்சம் கோடியை புதைத்து விடுவார்கள், எரித்து விடுவார்கள், எதோ செய்து விடுவார்கள், வங்கிக்குள் வராது என்று உறுதியாக நம்பினார்கள். அந்த இரண்டு லட்சம் கோடியை மீட்டதாக அறிவித்து 1 கோடி குடும்பங்களுக்கு தலா இருபதாயிரமாகவோ அல்லது 2 கோடி குடும்பங்களுக்கு தலா பத்தாயிரமாகவோ கொடுத்து, பணக்காரர்களிடம் இருந்து பிடுங்கி ஏழைகளுக்கு கொடுத்ததாய் ஒரு சினிமா காட்டலாம் என்பதுதான் திட்டமாக இருந்தது.

ஆனால் மக்கள் இந்த…

View original post 149 more words

Leave a comment